இலங்கை அணியில் சமீரா, மதுஷங்கா, ஹசரங்கா விலகல்

கொழும்பு: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. முன்னணி வீரர்கள் காயம் காரணமாக இந்த தொடருக்கான அணியை தேர்வு செய்வதில் இலங்கை கிரிக்கெட் வாரியம் சிக்கலை சந்தித்தது. இந்நிலையில் நேற்று 15 பேர் கொண்ட அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

வேகப்பந்து வீச்சாளர்களான துஷ்மந்தா சமீரா, தில்ஷான் மதுஷங்கா ஆகியோர் காயம் காரணமாக விலகி உள்ளதால் இவர்களுக்கு பதிலாக பினுரா பெர்னாண்டோ, பிரமோத் மதுஷன் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேவேளையில் வனிந்து ஹசரங்கா இடத்தை நிரப்பும் வகையில் ஆல்ரவுண்டர் துஷான் ஹேமந்தா அணிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார். கேப்டனாக தசன் ஷனகா நியமிக்கப்பட்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/kIBvJtm