2019 உலகக்கோப்பை முதல் இந்திய பேட்டிங் வரிசையின் 4-ஆம் நிலை பேட்டருக்கான தேடல் முடிந்தபாடில்லை. விராட் கோலியையே அந்த இடத்தில் களமிறக்கலாம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த ஊதுகுழலில் இணைந்துள்ளார் கோலியின் ஆர்சிபி சகா டிவில்லியர்ஸ்.
யார் யாரையோ முயற்சி செய்து பார்த்தார்கள்.விராட் கோலியே அவரது கேப்டன்சியில் சில முயற்சிகளைச் செய்து பார்த்தார். ஆனால், 4-ம் நிலை வீரர் சிக்கவில்லை. விராட் கோலி 3-ம் நிலையில் இறங்குகிறார். மேலும் உலகின் சிறந்த பேட்டர்கள் எல்லோரும் 3-ம் நிலையில்தான் இறங்கி வெற்றி கண்டவர்கள். விவ் ரிச்சர்ட்ஸ் முதல் ரிக்கி பாண்டிங், விராட் கோலி வரை அனைவரும் 3-ம் நிலைதான். எனவே விராட் கோலியைக் கொண்டு போய் அந்த நிலையில் இறக்குவது சச்சின் டெண்டுல்கரைக் கொண்டு போய் 2007 உலகக்கோப்பையில் ராகுல் திராவிட்- கிரெக் சாப்பல் கூட்டணி 4-ம் நிலையில் இறக்கி இந்தியா வெளியேறியதே அது போல் நடந்து விடும் என்றும் பலர் எச்சரித்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/oHgCmIy