மறக்குமா நெஞ்சம் | 2010-ல் இதே நாளில் 800-வது டெஸ்ட் விக்கெட்டை கைப்பற்றிய முத்தையா முரளிதரன்!

காலே: கடந்த 2010-ல் இதே நாளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 800-வது விக்கெட்டை கைப்பற்றி சாதனை படைத்திருந்தார் முத்தையா முரளிதரன். இது கிரிக்கெட் விளையாட்டின் வரலாற்று சாதனையாக அமைந்தது.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்து வீச்சாளராக முன்னாள் இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் அறியப்படுகிறார். கடந்த 1992-ம் ஆண்டு இலங்கை அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் அறிமுக வீரராக விளையாட தொடங்கினார். 2011 வரை அவரது ஆட்டம் தொடர்ந்தது. 133 டெஸ்ட் போட்டி மற்றும் 350 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/YfkHnBQ