கே.எல்.ராகுல் மீது நம்பிக்கை வைக்க இன்னும் இருக்கிறதா கிரிக்கெட் காரணங்கள்? - ஒரு பார்வை

இந்திய அணி தொடர் வெற்றிகளைப் பெற்றுக் கொண்டிருந்தாலும் ஒரு கேள்வி அனைத்து கிரிகெட் ரசிகர்களையும் குழப்புவது என்னவெனில் இந்திய அணியில் கே.எல்.ராகுலின் இடமே. இந்திய அணி பார்டர் - கவாஸ்கர் கோப்பையை தக்கவைத்துள்ளது. அணி வெற்றி பெறும் போது ‘செமயாக சொதப்பி’ வரும் ராகுல் அணியில் இருந்தால் என்ன கெட்டு விடப்போகிறது? என்று பலரும் நினைக்கலாம். ஆனால், அவர் அணியில் நீடிப்பதற்கு கிரிக்கெட் காரணங்கள் அல்லாத பிற காரணங்கள்தான் பிரதானமாக உள்ளது என்ற ஐயம் சிலருக்கு ஏற்படுவதும் நியாயமே.

அன்று நாக்பூரில் வெறும் 115 ரன்கள்தான் இந்திய அணியின் வெற்றிக்குத் தேவை. அந்த ஸ்கோரை எதிர்த்து ஆடும்போது கூட சுதந்திரமாக ஆட முடியாமல் எதிர் அணியில் ஏதோ, ராபர்ட்ஸ், ஆலன் டோனால்டு, மால்கம் மார்ஷல், ஷோயப் அக்தர், ஆம்புரோஸ், வால்ஷ் இருப்பது போல் அவர் முகத்தில் பீதியும், அவர் உடம்பில் நடுக்கமும் தோன்றக் காரணம் என்ன? அவர் இறங்கும் போதே, ‘எல்லாம் அவன் செயல்’ என நடிகர் வடிவேலு சொல்வது போல கூறிவிட்டு வந்திருப்பாரோ என்ற சந்தேகம் எழுந்தது. வடிவேலு புதிதாகக் கட்சியில் சேர வந்திருப்பவர்களைப் பார்த்துக் கூறுவார், “உங்க கிட்ட இருக்கிற அதே பீதி எங்கிட்டயும் ஹெவியாவே இருக்கு. அதுக்காக அத்து விட்டுட்டு ஓடிரக்கூடாது’ என்பார். அதையே ராகுல் சொல்வது போல் ஒரு மீம் கற்பனை செய்து பார்த்தால், ராகுலை அத்து விடாமல் அணியில் வைத்திருப்பது போல்தான் தோன்றுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/8nGeIqB