2017-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தரம்சலாவில் அறிமுகமான இந்திய இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் 2022-ல் இப்போது வங்கதேசத்துக்கு எதிராக சட்டோகிராமில் தன் 8-வது டெஸ்ட் போட்டியிலேயே ஆடுகிறார். அதுவும் வந்தவுடன் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இந்திய அணிக்கு வங்கதேசத்துக்கு எதிராக ஒரு வெற்றி வாய்ப்பையும் உருவாக்கிக் கொடுத்துள்ளார் என்றால், அவரை இந்த 5 ஆண்டுகள் எப்படி நம் அணி நிர்வாகம் கையாண்டுள்ளது, ஒதுக்கி வைத்து அவரை வெறுப்பேற்றியுள்ளது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
சட்டோகிராமில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் 16 ஓவர்கள் 6 மெய்டன் 40 ரன்களுக்கு 5 விக்கெட் என்று குல்தீப் யாதவ் அசத்த, வங்கதேசம் முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்குச் சுருண்டது. இந்திய அணி தன் இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணி மொத்தம் 513 ரன்களை வங்கதேசத்திற்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/JDRFiI4