143 ரன்கள் விளாசிய ஹர்மன்ப்ரீத்: இங்கிலாந்து மண்ணில் தொடரை வென்று சாதித்த இந்திய அணி

கென்ட்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய மகளிர் அணி 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 111 பந்துகளில் 143 ரன்கள் எடுத்திருந்தார். சர்வதேச கிரிக்கெட்டில் அவர் பதிவு செய்துள்ள ஆறாவது சதம் இது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரை இந்திய அணி இழந்த நிலையில் ஒருநாள் தொடரை வென்றுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/lFNAgoW