கள வீரர் டு வர்ணனையாளர் - 2022 ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னாவின் பங்களிப்பு

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சுரேஷ் ரெய்னாவை விடுவித்த நிலையில், 2022 ஐபிஎல் தொடரில் அவரின் பங்களிப்பு வேறு விதத்தில் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சீசன் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்த முக்கியமான வீரர் சுரேஷ் ரெய்னா. சில நாட்கள் முன் நடந்த ஐபிஎல் ஏலத்தில் யாரும் அவரை எடுக்க முன்வரவில்லை. ஐபிஎல் லீக்கில் 5,000 ரன்களுக்கு மேல் எடுத்த ஆறு வீரர்களில் ஒருவர், 205 ஐபிஎல் போட்டிகளில் 5,528 ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையால், 'மிஸ்டர் ஐபிஎல்' என ரசிகர்களால் அழைக்கப்பட்டுவந்த ரெய்னா ஏலம் போகாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் ஃபார்மில் இல்லை என்பதால்தான் எந்த அணி நிர்வாகமும் ஏலம் எடுக்க முன்வரவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/dJXAwCE