'தேசத்தின் மீதான விசுவாசத்தை நிரூபிக்க வேண்டியதில்லை' - ட்ரோல்களுக்கு ஷமி பதில்

புதுடெல்லி: 'இந்தியா மீதான எனது விசுவாசத்தை யாரிடமும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை' என்று இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஷமி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் உடனான போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த பின், முகமது ஷமி வலைதளங்களில் கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டார். அவருக்கு எதிராக ட்ரோல்கள் செய்யப்பட்டன. பலர் ஷமிக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரங்களை முன்வைத்தனர். அப்போது அந்த நிகழ்வு, விவாதங்களுக்கு வித்திட்டது. இதனிடையே, ஆங்கில ஊடகம் ஒன்று பேட்டியளித்த ஷமி, அந்த நிகழ்வு தொடர்பாக பேசியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/jekfv9I