பிரித்வி ஷாவை அழைத்து அணிக்குள் ஏற்கெனவே இருக்கும் வீரர்களை அவமானப்படுத்துகிறீர்கள்: கபில் தேவ் காட்டம்

இங்கிலாந்தில் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கு பிரித்வி ஷா அழைக்கும் திட்டம் என்பது ஏற்கெனவே அணிக்குள் இருக்கும் வீரர்களை அவமானப்படுத்துவதாகும் என்று இந்தியஅணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ஆனால், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில்லுக்கு ஏற்பட்ட காயத்தால் அவரால் 8 வாரங்களுக்கு ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் தொடக்க ஆட்டக்காரர் இடத்துக்கு இலங்கைப் பயணத்தில் உள்ள பிரித்வி ஷாவை அழைக்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/36cZTtq